தேர்தல் பாசிசம்!
மக்களாட்சி தேர்தல் அல்ல.! பா சிச மோடி கும்பலின் தேர்தல் நலனுக்காக ஏழு வாரங்களுக்கும் மேலாக நடத்தப்படும் மக்களவை தேர்தலின் முதல் கட்டம் நேற்று (19.04.2024) முடிவடைந்துள்ளது. மீதமுள்ள ஆறு கட்ட தேர்தல் ஜூன் மாதம் முதல் நாள் வரை நடக்க உள்ளது. தேர்தல் நடந்துகொண்டிருக்கும் அதேவேளையில், வேறெங்கும் காண முடியாதக் காட்சியாக, வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று கூறி “வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் அனைத்து வாக்குகளையும், வாக்கு ஒப்புகைச் சீட்டுகளுடன் முழுமையாக ஒப்பிட்டு சரிபாா்க்க உத்தரவிடக்கோரி” உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) என்பது கட்டுப்பாட்டு அலகு மற்றும் வாக்குப்பதிவு அலகு என்ற இரண்டு அலகுகளை கொண்ட இயந்திரம். இந்த இயந்திரத்தில் உள்ள பொத்தானை அழுத்துவதன் மூலம் வாக்காளர்கள் தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்களுக்கு வாக்கு செலுத்துவர். வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகித தணிக்கை பாதை எனப்படும் விவிபேட் (VVPAT) என்பது வாக்காளர் வாக்கு செலுத்தி முடிந்தவுடன், அவர் வாக்களித்த வேட்பாளரின் பெயர்