தட்கல்...,..
ஐ.ஆர்.சி.டி.சி.,யின் இணையதளத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சிப்போர், சர்வர் முடக்கம், தொழில்நுட்பக் கோளாறு போன்ற பிரச்னைகளை எதிர்கொள்வதாகவும், ஏஜன்ட்டுகளின் ஆதிக்கம் காரணமாக பல மடங்கு பணம் கொடுத்து, அவசரத்துக்கு, மக்கள் டிக்கெட் வாங்குகின்றனர். தட்கல் டிக்கெட்டுகளை வாங்குவதறக்காக ஏராளமான போலி கணக்குகளைத் தொடங்கி ஏஜன்ட்டுகள் டிக்கெட் வாங்குவதும் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், 3.5 கோடி போலி கணக்குகளை ஐ.ஆர்.சி.டி.சி. முடக்கி உள்ளது. இதுபோன்ற சிரமங்களை களையும் பொருட்டு,வருகிற ஜூலை 1 முதல் ஆதார் அடிப்படையில், தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு வருவதாக ரயில்வேத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதனடிப்படையில் தட்கல் டிக்கெட் முன்பதிவில் பயன்பெற ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், ஆதார் எண்ணை பயனர் இணைக்க வேண்டும். தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரத்தில், அந்த பயனருக்கு, மற்ற பயனர்களை காட்டிலும், 10 நிமிடங்கள் முன்னுரிமை கொடுக்கப்படும். இந்த நேரத்தில், ஏஜன்ட்டுகளால் கூட தட்கல் டிக்கெட் எடுக்க முடியாது. வரும் ஜூலை 15 முதல் கவுன்டர்களில் பயண...