இடுகைகள்

பாசிச சர்வதிகாரம் வழிகோரும்

படம்
  கருப்புச் சட்டம். ஊழல் அல்லது கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி தொடர்ந்து 30 நாட்கள் சிறைக்காவலில் வைக்கப்பட்டால் ஓர் அமைச்சரோ, ஒரு மாநில முதல்வரோ, ஏன் நாட்டின் பிரதமரோ பதவி பறிப்புக்கு உள்ளாக வழிவகை செய்யும் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வியாழக்கிழமையுடன் முடியவிருக்கும் நிலையில், செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்ட இந்த மசோதா மூலம் ஒரு புயலைக் கிளப்பியுள்ளது ஒன்றிய அரசு. இந்த மசோதாவை மக்களவையில், கடும் அமளி துமளிகளை மீறியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். அப்போது, அந்த மசோதாவின் நகல்களை கிழித்து அவரது முகம் நோக்கி எறியப்பட்ட சம்பவமும் அரங்கேறியது. இந்த மசோதாவைப் பற்றியும், அதனை எதிர்க்கட்சிகள் ஏன் இவ்வளவு ஆவேசமாக எதிர்க்கின்றன என்பது பற்றியும் சற்று விரிவாகப் பார்ப்போம். இந்த மசோதாவின்படி, 5 ஆண்டுகளுக்கும் மேலான தண்டனை விதிக்கும் வகையிலான எந்தவொரு குற்றச்சாட்டின் கீழும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு, 30 நாட்களுக்கு சிறையில் இருந்தால், 31-வது நாளில் அவர்களை உரிய பரிந்துரையின்படி ஆள...

கடவுள்+மதம்=உண்மை!

படம்
  23.01.1938 அன்று ஆய்க்கவுண்டன் பாளையத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மதம், கடவுள் என்னும் தலைப்பில் தந்தை பெரியார் ஆற்றிய உரை   சிறிய பட்டிக்காடாகிய இங்கு நாலாயிரத்துக்கு மேற்பட்டவர் கூடியுள்ள இப்பொதுக்கூட்டத்தைக் காணும் போது நான் உண்மையிலேயே சந்தோஷமடைகிறேன்.   பெரிய பட்டணங்களில் சாதாரணமாக கூடும் அளவைவிட இது இரண்டு மூன்று பங்கு அதிகமாகவே இருக்கிறது.  நானோ விஷமிகளால் எவ்வளவோ தூற்றப்பட்டு-ஜாதி இழந்தவனெனவும், தேசத்துரோகியெனவும், நாஸ்திகனெனவும், அரசியலில் பிற்போக்கானவன் என்று தூற்றப்பட்டு வந்தும், அப்படிப்பட்ட என் பிரசங்கத்தைக் கேட்க இந்த 100 வீடுள்ள கிராமத்தில் 10, 20 மைல் தூரத்திலிருந்து 4000 பேர்கள் இவ்வளவு திரளான மக்கள் கூடியிருக்கும் இக்காட்சியை என் எதிரிகள் வந்து காண வேண்டுமென ஆசைப்படுகிறேன்,   விஷமப் பத்திரிகை ஆசிரியர்கள் பார்த்தால் அவர்கள் நெஞ்சு வெடித்துப் போகும் என்றே எண்ணுகிறேன். இந்த பிரமாண்டமான கூட்டத்தைப் பார்க்கும் போது, உண்மையிலேயே என்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும் என் தொண்டை விரும்புபவர்களும், ஆதரிப்பவரும், ஏற்றுக்கொள்பவரும் இருக்கிறா...

மர்மமான துணை

படம்
சென்னை  ஜாபர்கான்பேட்டையில் நாய் கடித்துசமையல்தொழிலாளிகருணாகரன் என்பவர் உயிரிழந்துள்ளார். தடுக்க முயன்ற உரிமையாளர் பூங்கொடியையும் நாய் கடித்து குதறியது. பல்லாவரத்தில் படுவேகமாக சென்றபோது விபரீதம் பைக்குகள் நேருக்குநேர் மோதி சிறுவன் உள்பட 2 பேர் பலி: மேலும் 3 பேர் படுகாயம். இலங்கை சிறைபிடித்த மீனவர்களை மீட்காத ஒன்றிய அரசை கண்டித்து தங்கச்சிமடத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் ரயிலை மறித்து போராட்டம். முன் அனுமதியின்றி வக்கீல்கள் நீதிமன்றத்தை புறக்கணித்தால் சஸ்பெண்ட்.உயர்நீதிமன்றம் கிளை,மதுரை. குறைந்தபட்ச மாதாந்திர செல்போன் கட்டண பேக்கை நிறுத்தியது ஏர்டெல்: வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி. மராட்டிய மாநிலத்தில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது கனமழை. மும்பையில் தொழில்நுட்பக் கோளாறால் பாதி வழியில் நின்ற மோனோ ரயில்: கிரேன் மூலம் பயணிகள் பாதுகாப்பாக மீட்பு. பெண்களின் ஆபாச வீடியோக்கள் பதிவேற்றத்தை தடுக்க ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும்: தமிழக டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு. ஆபரேசன் சிந்தூர் மோடி அரசை விமர்சித்த பத்திரிகையாளர்கள் சித்தார்த் வரதராஜன்,கரண் தாபருக்கு சம்மன் அனுப்பிய அசாம் போ...