இடுகைகள்

எகிப்தை விட பழமை சிந்து!

படம்
  மகளிருக்கு 5 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கியது மக்களுக்கு சர்ப்ரைஸ்,  விரோதிகளுக்கு ஷாக். ஆயிரம் ஆண்டுகள் பேசும் சாதனையை ஐந்தாண்டுகளில் செய்து முடித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம். அரசியல்வாதி எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக இருப்பவர் எடப்பாடி பழனிசாமி. பாஜக-வின் கிளை கழகமாகவே அதிமுக மாறிவிட்டதாகவும் மு.க.ஸ்டாலின் விமர்சனம். நாடு முழுவதும் இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாட்டம். தமிழ்நாட்டில் பிரசித்திபெற்ற கோயில்களில் கொண்டாட்டங்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள். திமுகவை விஜய் தொடர்ந்து விமர்சிப்பது குறித்த கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் பதில். அண்ணாவே தன்னைப் பார்த்து தான் திமுகவை தொடங்கினார் என செல்லுவார் என கிண்டல் பட்டாசு தொழிலை பாதுகாக்க ஒன்றிய அரசின் தொழில் துறைச் செயலாளரை சந்தித்து பட்டாசு ஆலை உரிமையாளர்கள் வலியுறுத்தல். 18 சதவீத ஜிஎஸ்டியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரிக்கை. திருவண்ணாமலை, தஞ்சை, கரூர், வேலூர் உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் மாசி மாத சனிப் பிரதோஷ சிறப்பு வழிபாடு சென்னை கீழ்ப்பாக்கத்...

10 ஆண்டுகளில் நீதிபதிகள் மீது

படம்
  9000  புகார்களா? கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது 8 ஆயிரத்து 630 புகார்கள்  மக்களவை கூட்டத்தொடரில் திமுக எம்பி மாதேஸ்வரன் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் பதவி வகித்த நீதிபதிகள் மீது எத்தனை புகார் பெறப்பட்டுள்ளது? அந்த புகார்களுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.  திமுக எம்பி-யின் கேள்விக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேவால் பதிலளித்துள்ளார். அவர் அளித்துள்ள பதில் பொதுமக்களை அதிர்ச்சிக்கு ஆழ்த்தியுள்ளது.  கடந்த 2016ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரையில் ஒவ்வொரு ஆண்டும் உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபகள் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கிடைக்கப்பெற்ற புகார்களின் எண்ணிக்கையை ஆண்டுவாரியாக கீழே காணலாம். 2016ம் ஆண்டு -  729 2017ம் ஆண்டு - 682 2018ம் ஆண்டு - 717 2019ம் ஆண்டு - 1037 2020ம் ஆண்டு - 518 2021ம் ஆண்டு - 686 2022ம் ஆண்டு - 1012 2023ம் ஆண்டு - 977 2024ம் ஆண்டு - 1170 2025ம் ஆண்டு - 1102 கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமாக கடந்த 2024ம் ஆண்டில...

ஏமாற்றுவதற்காகவே உருவாக்கப்பட்ட திட்டம்

படம்
பி.எம்.கேர்ஸ் :  பி.எம்.கேர்ஸ் நிதி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென்ற கோரிக்கைக்கு, “அந்த நிதியம் ஒரு தனியார் நிதியம்; எனவே, அதை நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது” என்று நாடாளுமன்றச் செயலகத்திற்கு “அறிவுறுத்தி” பிரதமர் அலுவலகம் “உத்தரவு” போட்டுள்ளது. தனியார் நிதி குறித்து விவாதிக்க முடியாது என்பது சரிதான் - ஆனால் பி.எம்.கேர்ஸ் தனியார் நிதியமா என்கிற கேள்வி முக்கியமானது. இப்போது அதைத் தனியார் நிதியம் என்று அரசு சொல்வது இந்திய மக்களையும், நாடாளுமன்றத்தையும், நீதிமன்றத் தையும் ஏமாற்றுவதற்கான ஒரு செயலே அன்றி, உண்மையில் அது தனியார் நிதியம் அல்ல.  அரசே உருவாக்கிய நிதியம் 2020 மே 6-ஆம் தேதி பத்திரிகை தகவல் அலுவல கம் (PIB) வெளியிட்டுள்ள செய்தியின் இரண்டாவது பத்தி இப்படி விவரிக்கிறது: “கோவிட் போன்று மிகத் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தும் பாதிப்பு களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க, அதற்கென்று பிரத்யேகமாக ஒரு நிதியம் தேவைப்படுகிறது என்பதை இந்திய அரசாங்கம் உணர்ந்தது.  அதனடிப்படையில், 2020 மார்ச் 28 அன்று ஒரு நிதியம் உருவாக்கப்பட்டு, அதற்குப் ‘பிரதம மந்திரியி...