இடுகைகள்

தட்கல்...,..

படம்
  ஐ.ஆர்.சி.டி.சி.,யின் இணையதளத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சிப்போர், சர்வர் முடக்கம், தொழில்நுட்பக் கோளாறு போன்ற பிரச்னைகளை எதிர்கொள்வதாகவும்,  ஏஜன்ட்டுகளின் ஆதிக்கம் காரணமாக பல மடங்கு பணம் கொடுத்து, அவசரத்துக்கு, மக்கள் டிக்கெட் வாங்குகின்றனர். தட்கல் டிக்கெட்டுகளை வாங்குவதறக்காக ஏராளமான போலி கணக்குகளைத் தொடங்கி ஏஜன்ட்டுகள் டிக்கெட் வாங்குவதும் தெரிய வந்துள்ளது.  கடந்த ஆண்டில் மட்டும், 3.5 கோடி போலி கணக்குகளை ஐ.ஆர்.சி.டி.சி. முடக்கி உள்ளது. இதுபோன்ற சிரமங்களை களையும் பொருட்டு,வருகிற ஜூலை 1 முதல் ஆதார் அடிப்படையில், தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு வருவதாக ரயில்வேத்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதனடிப்படையில் தட்கல் டிக்கெட் முன்பதிவில் பயன்பெற ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், ஆதார் எண்ணை பயனர் இணைக்க வேண்டும்.  தட்கல் டிக்கெட் முன்பதிவு நேரத்தில், அந்த பயனருக்கு, மற்ற பயனர்களை காட்டிலும், 10 நிமிடங்கள் முன்னுரிமை கொடுக்கப்படும். இந்த நேரத்தில், ஏஜன்ட்டுகளால் கூட தட்கல் டிக்கெட் எடுக்க முடியாது. வரும் ஜூலை 15 முதல் கவுன்டர்களில் பயண...

ஊழலுடனா கூட்டணி ?

படம்
  தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இன்று லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் 97% மக்களிடம் கொரோனா எதிர்ப்பு சக்தி இருப்பது சுகாதாரத்துறை ஆய்வில் உறுதியாகியுள்ளது. புதிய வகை கொரோனா பரவல் குறித்த தகவல்கள் கடந்த இரு வாரங்களாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 2026-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.  1950-களில் ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்ட ரைஸ் குக்கர், இன்று வரை உலகளவில் பயன்படுத்தப்படும் முக்கிய சமையல் உதவி கருவியாக உள்ளது. ராணுவ வீரர்களை பா.ஜ.க.அரசு மதிக்கும் முறை! ஊழலுடனா கூட்டணி ? அ.தி.மு.க.வுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கப் போகிறாராம் அமித்ஷா.  இதனைச் சொல்வதற்கு அவருக்கு வெட்கமாக, அவமானமாக இல்லையா? 'மோடியா? லேடியா?' என்று கேட்டவர் ஜெயலலிதா. மறந்து போய்விட்டதா அமித்ஷா அவர்களுக்கு? 2014 ஏப்ரல் 21 அன்று சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜெயலலிதா பேசியது நினைவில் இருக்கிறதா பா.ஜ.க.வினருக்கு? “ஒரு...

முன்கணிப்பாளர்

படம்
  பாபா வங்கா தீர்க்கதர்சியா? பாபா வங்கா (Baba Vanga), பல்கேரியாவைச் சேர்ந்த ஒரு பிரபலமான கண்ணற்ற முன்கணிப்பாளர் ஆவார்.  இவர் 1911-1996 வரை வாழ்ந்தவர். இவரது கணிப்புகள் உலகளவில் பரவலாகப் பேசப்படுகின்றன, மேலும் பலர் இவரை ஒரு தீர்க்கதரிசியாகக் கருதுகின்றனர். இருப்பினும், இவரது கணிப்புகளைப் பற்றிய விவாதங்களில் உண்மை, மிகைப்படுத்தல் மற்றும் சர்ச்சைகளும் உள்ளன. வங்காவின் கணிப்புகள் என்றும் நடந்தவை எனக் கூறப்படுபவை: வங்காவின் கணிப்புகள் பல முக்கிய உலக நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தப்பட்டு, அவை நடந்ததாகக் கருதப்படுகின்றன. சில எடுத்துக்காட்டுகள்: 2001அமெரிக்காவில் "இரும்புப் பறவைகள்" (விமானங்கள்) மூலம் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறும் என்று கணித்ததாகக் கருதப்படுகிறது. இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட பேரழிவு சுனாமியை முன்னறிவித்ததாகக் கூறப்படுகிறது. பராக் ஒபாமாவின் தேர்தல் (2008)**: ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்கர் அமெரிக்காவின் ஜனாதிபதியாக வருவார் என்று கணித்ததாகக் கூறப்படுகிறது. இளவரசி டயானாவின் மரணம் (1997)**: இவரது மரணத்தை முன்னறிவித்ததாக சிலர் நம்புகின்றனர். இவை மற்றும் பல கணிப்புகள் பாபா வங்க...

வஞ்சனை செய்யும்...?

படம்
  இ ந்தியாவில் ஐந்து வயது முதல் குழந்தைகள் அனைவருக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும் என்பது அரசியல் சட்டத்தில் இடம் பெற்றிருந்தாலும், நடைமுறையில் அதை பெறுவதற்கு எளிய மக்கள் படாதபாடு பட வேண்டி இருந்தது.  ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவை அனைவருக்குமான கட்டாய கல்வி சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதன் மூலம் இந்தியாவில் ஒவ்வொரு குழந்தைக்குமான கல்வி என்பது உறுதி செய்யப்பட்டது. இதனை எப்படி நடைமுறைப்படுத்துவது என்கிற ஆலோசனையின் போது, உரிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அதன்படி குழந்தைகள் தங்கள் வீட்டிலிருந்து இவ்வளவு தூரத்தில் உள்ள தனியார் பள்ளிகளிலும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.  ஒவ்வொரு  பள்ளியிலும் 25 சதவீத இடங்கள் இந்த அனைவருக்குமான கல்வி சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டிருக்கும். அதில், அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் பிள்ளைகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.  குழந்தைகளின் விண்ணப்ப மனுக்களை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பள்ளியிலு ம் 25 சதவீத இடங்கள் நிரப்பப்படுகின்றன.  இந்தப் பிள்ளைகளுக்குரிய கல...

சாதனையாளர்கள்.

படம்
  கின்னஸ் உலக சாதனைகளில் ஒரு இடத்தைப் பெறுவது என்பது சாதாரண சாதனையல்ல; அதற்கு எல்லைகளைத் தாண்டி, வேறு யாரும் செய்யாத ஒன்றைச் சாதிக்க வேண்டும். தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள் பலர், இந்த மதிப்புமிக்க புத்தகத்தில் தங்கள் பெயர்களைப் பொறித்துள்ளனர். அந்த வகையில், இந்த பட்டியலில், கின்னஸால் அங்கீகரிக்கப்பட்ட சாதனைகள் மூலம் வரலாறு படைத்த தமிழ்த் திரையுலக முக்கிய பிரபலங்களை பற்றி பார்ப்போம். எஸ். பி. பாலசுப்ரமணியம் பத்ம விருதுகளையும் ஆறு தேசிய விருதுகளையும் வென்ற புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம், 16 மொழிகளில் 50,000 க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.  அவரது குறைந்த அறியப்பட்ட சாதனை ஒன்றில், ஒரே நாளில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை 27 கன்னடப் பாடல்களைப் பதிவு செய்தது அடங்கும். அவரது இணையற்ற குரலும் அர்ப்பணிப்பும் அவரை இந்திய இசையில் ஒரு அன்பான அடையாளமாக மாற்றியது, அவருக்கு சினிமா வரலாற்றில் மட்டுமல்ல, உலகளாவிய சாதனைப் புத்தகங்களிலும் ஒரு இடத்தைப் பெற்றுத் தந்தது. . மனோரமா முதுபெரும் நடிகை 'ஆச்சி' மனோரமா, பெண் நடிகைகள் மத்தியில் அ...

சொப்பன லோகத்தில் மகிழ்ந்திருந்து?

படம்
  இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரகசிய ஆவணங்கள் மூலம் மோடி அரசால் மிரட்டப்படுவதாகவும் நீதிபதிகளின் பிள்ளைகளை சிறையில் அடைத்துவிடுவதாகஅச்சுறுத்தப்படுவதாகவும்பிரஷாந்த்பூஷண்அம்பலப்படுத்தியுள்ளார். இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் (IAMC) என்ற நிறுவனத்தின் சார்பாக கடந்த ஜூன் 6 அன்று அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், “இந்தியாவில் ஜனநாயகத்தின் நிலை” என்ற தலைப்பில் உச்சநீதிமன்ற வழக்குரைஞர் பிரஷாந்த் பூஷண் சிறப்புரையாற்றினார். அவ்வுரையில், இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரகசிய ஆவணங்கள் மூலம் மோடி அரசால் மிரட்டப்படுவதாகவும் நீதிபதிகளின் பிள்ளைகளை சிறையில் அடைத்துவிடுவதாக அச்சுறுத்தப்படுவதாகவும் பிரஷாந்த் பூஷண்கூறியுள்ளார். AC-யின் (குளிர்பதனம்)அளவு 20°C முதல் 28°C வரை மட்டுமே இருக்குமாறு புதிய விதிமுறை கொண்டுவரப்பட உள்ளதாக ஒன்றிய அமைச்சர் மனோகர் லால் கட்டார் தகவல் தெரிவித்துள்ளார். “விரைவில் 410 மில்லியன் டாலர் மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்படும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருத்தாசலத்தில் பாதயாத்திரை சென்று கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியதில் 3 பே...

கீழ்மக்கள்?

படம்
“ ஈழம் பிரபாகரனுக்கு ஈடான வீரம் பெற்றவர் எடப்பாடி..” -கே.டி. ராஜேந்திர பாலாஜி .(இந்தவார நகைச்சுவை) இந்திய மாணவனை வெளியேற்ற விலங்கிடுகிறார்கள் எங்கள் நாட்டுக்குள் உரிய ஆவணங்களுடன் சட்டபூர்வமாக வருபவர்களை நாங்கள் வரவேற்கிறோம்.  ஆனால், விசா அத்துமீறல்கள் அனுமதிக்கப்படாது” என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளது. அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்றதிலிருந்து சட்டவிரோத குடியேற்றங்களுக்கு எதிரான நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளார்.  அந்த வகையில் சட்டவிரோத குடியேறிகள், பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.  சட்டவிரோதமாக குடியேறியது உள்ளிட்ட காரணங்களுக்காக 1000+ இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவின் நேவார்க் விமான நிலையத்தில், இந்திய மாணவர் ஒருவர் கைவிலங்கிடப்பட்டு, தரையில் மண்டியிட வைத்து, கட்டாயமாக வெளியேற்ற முயன்றது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.  இது தொடர்பாக அங்குள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூட, ”இந்திய மாணவர் ஒருவருக்கு நேவார்க் விம...